Monday, October 30, 2017

ரயில் பயணம்!




கடந்தது செல்லும் மரங்கள் ,
அவ்வப்போது கீரிச்சிடும் சப்தம் ,
எதிரே இருப்பவர் நாளிதழ் கடந்தருவார் ,
கூவி விற்கும் பண்டங்கள் சொல்லிவிடும் அடுத்துவரும் நிலையத்தை,
மனதை மயக்கிவிடும் பக்கத்தில் இருக்கும் பாப்பாவின் சிரிப்பு ,
இலவசமாய் காதில் விழும் அடுத்தவர் குடும்பக்கதை ,
அப்துல் , அர்ஜுன் இருவரின் செருப்பும் இருக்கையின் அடியில் ஒன்றாய்சேர்ந்துகிடக்கும் ,
வேற்று மொழிக்காரரிடம் அவர் மொழியில் ஓரிரு வார்த்தை பேசிவிட்ட பெருமை பூக்கும்,
பெரிய தொட்டிலில் அத்தனை குழந்தைகளையும் தாலாட்டும் தோரணை,
ரயில் பயணம் வெகு சுகம் தான்
மறுநாள் காலையில் அவசரமாய் பெட்டியின் கழிப்பறைக்கு செல்லும்வரை !!


No comments: