அவள் ஒழுக்கம் விமர்சிக்கப்பட்டது.
லெக்கிங்க் உடுத்தினாள் அதை
ஆபாசம் என்று பத்திரிக்கை படமெடுத்தது.
சுடிதாரின் மேல்துண்டு சரியும் போதெல்லாம்
ஒரு ஜோடி கண்களேனும் அதை ஊடுருவி பார்த்து விடுகின்றன.
இரவு உடையில் வாசல் வரை வந்துவிட்டாள்
அது இரவிற்க்கானது மட்டுமே என்ற இலக்கணம் போதிக்கப்பட்டது.
அடக்கமாய் சேலை அணிந்தாள்
பேருந்தில் ஒரு கை லாவகமாய் அவள் இடையை தடவியது
கோபமாய் பேருந்திலிருந்து இறங்கினாள் .
சாலையோரம்,
முழுபோதையில் கிட்டத்தட்ட நிர்வாணமாக குடிமகனும்,
நிர்வாண நாயொன்றும் கிடந்தன .
அவர்களை துளியும் சட்டை செய்யாமல்
பெண்கள், வெகு இயல்பாகவே அவர்களை கடந்து சென்றார்கள் !!
No comments:
Post a Comment