அந்தியில் ஆற்றங்கரைதனில் ,
சந்தத்தால் கவிபாட ,
சிந்தித்து காத்திருந்தேன் ...
பளிங்கு சிலையொன்று பக்கத்தில்வந்து ,
என்னை பாரென்றது சித்தம் குழம்பி நான் , தாங்கள் யாரென்றேன்
பிள்ளை அழுமுன் தாய்,தமிழ்ப்பால் கொணர்ந்தேன் என்றாள்
அவள் என அன்னைத்தமிழ் என்று கண்டுகொண்டேன் !!
உன்னிடம் சில வினாக்கள் உண்டென்றேன்
உலகம் அறியவிரும்பும் குழந்தை எத்தனை கேள்விகள் கேட்கும் -
நீயும் அப்படி கேள் என்றாள் !
தாயே , தாங்கள் தோன்றிய திங்கள் எதுவோ ?
காற்று தோன்றிய காலம் அறிவாய் - நீ
கானகம் தோன்றிய காலமும் அறிவாய் .
நேற்று பிறந்த பிள்ளாய் நீ -
என் தோற்றம் பற்றி அறியாய் !
என்னில் , ஒரு துண்டுதான் சூரியன் .
சூரியன் தோன்றிய நாளை நீயே கணக்கிட்டு சொல் !!
தமிழகத்தில் தமிழின் நிலை என்னவோ?
நான் தோன்றியதங்கே தான் ,
நான் ஒளிகொண்டதும் அங்கேதான் -
ஆனால் விளக்கின் அடியில் இன்னும் கொஞ்சம் இருள் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது !!
உன் புதல்வர்கள் எல்லாம் அயலகம் புகுகிறார்களே உன் புகழும் புதையுமோ ?
பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினாலும் தாய்ப்பால் தந்தவள் நானல்லவா?
புலம்பெயர்ந்த புதல்வர்களே உலகெங்கும் - என் புகழ் பற்றி பேசுகிறார்கள் ..
ஈழத்தின் தமிழன்தான் இன்னும் ஈரமோடு என்கண்களை காக்கின்றான்
முகவரி மறந்தாலும் - அவர்கள் முகத்தை மறைக்கவில்லை !!
உன்னை தாங்களே வளர்ப்பதாய் சிலர் சொல்கிறார்களே ?
நிலவு நினைக்கிறது தான் அழகியென்று -
அதுவெறும் பரிதியின் நிழலென்று தெளியாத அறியாமையினால் !!
இரெண்டே மதிப்பெண்கள் தானே என மாணாக்கர்
திருக்குறளை விடுக்கும்போது உன் நெஞ்சு என்ன நினைக்கும்?
அவர்கள் விடுப்பது குறளைஅல்ல - மூடிகொள்வது தங்கள் இருவிழிகளென சொல்லத்துடிக்கும் !!
தமிழ்ஒதுக்கி பிறமொழி கற்கும் மேதைகள்பற்றி ?
கண்களை விற்று ஓவியம் வாங்கும் பேதைகள்.
அன்னை இருக்க சித்தியை அழைக்கும் பேடிகள் !!
இனி எங்கள் கடமைஎன்ன சொல்வாயா ?
உன் பிள்ளைக்கு தமிழை ,மொழியென்று சொல்லாதே ,
அவன் வாழ்வின் நெறியென்று உயிரில் உற்றிவை !!
உன் மாட்சி மங்கிற்றொ ?
சிகரம்தான் சிதைந்தாலும் - என்னை சிலுவையிலே அறைந்தாலும்
அரிசியலில் என்சேலை சிறிது அழுக்காகி போனாலும்
ஆதவனை கைக்கொண்டு மறைப்பார் யார் ??
வருங்காலம் உன் புகழ் பேசுமா?
வருந்தாதே வஞ்சியே , என் புகழ் பேசாவிடில் உங்களுக்கு வருங்காலம் என்றொன்று இல்லை.
பின் அன்னைஎன்னை அரவணைத்து நகர்ந்தாள் அவள் அருமை நினைந்து
'' தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு நடந்தேன்
என் காதில் "அமிழ்து ,அமிழ்து "என்று ஒலிக்ககண்டேன் !! -
சந்தத்தால் கவிபாட ,
சிந்தித்து காத்திருந்தேன் ...
பளிங்கு சிலையொன்று பக்கத்தில்வந்து ,
என்னை பாரென்றது சித்தம் குழம்பி நான் , தாங்கள் யாரென்றேன்
பிள்ளை அழுமுன் தாய்,தமிழ்ப்பால் கொணர்ந்தேன் என்றாள்
அவள் என அன்னைத்தமிழ் என்று கண்டுகொண்டேன் !!
உன்னிடம் சில வினாக்கள் உண்டென்றேன்
உலகம் அறியவிரும்பும் குழந்தை எத்தனை கேள்விகள் கேட்கும் -
நீயும் அப்படி கேள் என்றாள் !
தாயே , தாங்கள் தோன்றிய திங்கள் எதுவோ ?
காற்று தோன்றிய காலம் அறிவாய் - நீ
கானகம் தோன்றிய காலமும் அறிவாய் .
நேற்று பிறந்த பிள்ளாய் நீ -
என் தோற்றம் பற்றி அறியாய் !
என்னில் , ஒரு துண்டுதான் சூரியன் .
சூரியன் தோன்றிய நாளை நீயே கணக்கிட்டு சொல் !!
தமிழகத்தில் தமிழின் நிலை என்னவோ?
நான் தோன்றியதங்கே தான் ,
நான் ஒளிகொண்டதும் அங்கேதான் -
ஆனால் விளக்கின் அடியில் இன்னும் கொஞ்சம் இருள் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது !!
உன் புதல்வர்கள் எல்லாம் அயலகம் புகுகிறார்களே உன் புகழும் புதையுமோ ?
பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினாலும் தாய்ப்பால் தந்தவள் நானல்லவா?
புலம்பெயர்ந்த புதல்வர்களே உலகெங்கும் - என் புகழ் பற்றி பேசுகிறார்கள் ..
ஈழத்தின் தமிழன்தான் இன்னும் ஈரமோடு என்கண்களை காக்கின்றான்
முகவரி மறந்தாலும் - அவர்கள் முகத்தை மறைக்கவில்லை !!
உன்னை தாங்களே வளர்ப்பதாய் சிலர் சொல்கிறார்களே ?
நிலவு நினைக்கிறது தான் அழகியென்று -
அதுவெறும் பரிதியின் நிழலென்று தெளியாத அறியாமையினால் !!
இரெண்டே மதிப்பெண்கள் தானே என மாணாக்கர்
திருக்குறளை விடுக்கும்போது உன் நெஞ்சு என்ன நினைக்கும்?
அவர்கள் விடுப்பது குறளைஅல்ல - மூடிகொள்வது தங்கள் இருவிழிகளென சொல்லத்துடிக்கும் !!
தமிழ்ஒதுக்கி பிறமொழி கற்கும் மேதைகள்பற்றி ?
கண்களை விற்று ஓவியம் வாங்கும் பேதைகள்.
அன்னை இருக்க சித்தியை அழைக்கும் பேடிகள் !!
இனி எங்கள் கடமைஎன்ன சொல்வாயா ?
உன் பிள்ளைக்கு தமிழை ,மொழியென்று சொல்லாதே ,
அவன் வாழ்வின் நெறியென்று உயிரில் உற்றிவை !!
உன் மாட்சி மங்கிற்றொ ?
சிகரம்தான் சிதைந்தாலும் - என்னை சிலுவையிலே அறைந்தாலும்
அரிசியலில் என்சேலை சிறிது அழுக்காகி போனாலும்
ஆதவனை கைக்கொண்டு மறைப்பார் யார் ??
வருங்காலம் உன் புகழ் பேசுமா?
வருந்தாதே வஞ்சியே , என் புகழ் பேசாவிடில் உங்களுக்கு வருங்காலம் என்றொன்று இல்லை.
பின் அன்னைஎன்னை அரவணைத்து நகர்ந்தாள் அவள் அருமை நினைந்து
'' தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு நடந்தேன்
என் காதில் "அமிழ்து ,அமிழ்து "என்று ஒலிக்ககண்டேன் !! -
No comments:
Post a Comment