Wednesday, February 26, 2014

நட்பின் தூரம் !!

தூரத்தில் இருக்கிறது சூரியன்
உலகெங்கும் தன் தூரிகையால் ஒளிகூட்டி
எங்கோ சிரிக்கிறது வெண்ணிலா
தன் குளுமையால்  உயிர்களை தாலாட்டி
புதரில் பூத்திருக்கும் தாழம்பூ
சுற்றமெங்கிலும் தன் மணம்பரப்பி
மலை உச்சியின் ஒற்றைமரம்
சுமந்திருக்கும் நனிசுவை கொண்ட தேன்கூட்டை
எங்கோ இருக்கிறாய் நீ -நம்
நட்பின் சுவையை மென்மேலும் கூட்டியபடி
நட்பிற்கு தூரம்ஒரு பாரம் இல்லையென்று
நினைத்தபடி அண்ணார்ந்து பார்த்தேன்
விமானம் ஒன்று என்னை கடக்கிறது , பயணிகளையும்
என் மனதையும் நீ இருக்கும்
இடம்நோக்கி சுமந்தபடி !!

No comments: