ஏழு வயதில் என் நண்பர்களுடன்
உன் மேல் ஏறி நின்று ஆடியபோதெல்லாம்,
கீச் கீச் சென்று நீ சத்தம் இட்டாலும்
அதை சட்டை செயாமல் நான்
ஆடிய ஆட்டம் நீ அறிவாய்!!
கீச் கீச் சென்று நீ சத்தம் இட்டாலும்
அதை சட்டை செயாமல் நான்
ஆடிய ஆட்டம் நீ அறிவாய்!!
பதினான்கு வயதில் என்னை வீட்டிலேயே
பூட்டி வைத்த போது
உன்னை உடைத்து நான் வெளியேற
நினைத்த ஆத்திரம் நீ அறிவாய் !!
பூட்டி வைத்த போது
உன்னை உடைத்து நான் வெளியேற
நினைத்த ஆத்திரம் நீ அறிவாய் !!
இருபத்தி ஒரு வயதில் காதலுற்ற போது
பலர் வந்து உன்னை தட்டும் போதல்லாம்
அவரோ என நினைத்து
துள்ளி குதித்து உன்னை திறந்த ஆவலையும்
அவரில்லை என்ற போது நான் அடைந்த
ஏமாற்றத்தையும் நீ அறிவாய் !!
பலர் வந்து உன்னை தட்டும் போதல்லாம்
அவரோ என நினைத்து
துள்ளி குதித்து உன்னை திறந்த ஆவலையும்
அவரில்லை என்ற போது நான் அடைந்த
ஏமாற்றத்தையும் நீ அறிவாய் !!
என்னவன் வந்த போது,
அவன் முகம் பார்க்க ஆசை இருந்தும்
அத்தனையையும் அடக்கி ,
உன் பின்னால் என் பாதி உடல் மறைத்து
நான் தவித்த தவிப்பை நீ மட்டுமே அறிவாய் !!
அவன் முகம் பார்க்க ஆசை இருந்தும்
அத்தனையையும் அடக்கி ,
உன் பின்னால் என் பாதி உடல் மறைத்து
நான் தவித்த தவிப்பை நீ மட்டுமே அறிவாய் !!
ஊர் கூடி வாழ்த்திய பிறகு ,
தோழிமார் என்னை தள்ளிய பின்
நாங்கள் இருவரும் அடையும் இன்பத்தை
யாருமே அறியாத போதும்
என் காதலையும் , நாணத்தையும்
நீ மட்டுமே அறிவாய் என் ஆருயிர் தோழி !!!
தோழிமார் என்னை தள்ளிய பின்
நாங்கள் இருவரும் அடையும் இன்பத்தை
யாருமே அறியாத போதும்
என் காதலையும் , நாணத்தையும்
நீ மட்டுமே அறிவாய் என் ஆருயிர் தோழி !!!