Sunday, August 21, 2011

கலையாத தலை முடி.. கலைந்து கிடக்கும் மனது!

தலை கலைந்து , புழிதி வாரி இறைத்து,


சகதியில் உழன்று , காலில் முள் தைத்த போது ,

நண்பன் தன் எச்சில் தொட்டு உடனே மருந்திடுவன்

நாள் எல்லாம் சுற்றி திரிந்த போதும் ,

உடம்பு களைத்திருந்தது, மனசு 

மட்டும்  மகிழ்ச்சியில்  திளைத்திருந்தது ,

அழகாய் தலை சீவி, AC வண்டியில் பயணம் செய்து

நாள் எல்லாம் சொகுசாய் வாழந்தாலும் ,

மனது மட்டும் கலைந்தே கிடக்கிறது,

ஏனோ  சீர் செய்வர் யாரும் இல்லை.

Wednesday, August 17, 2011

குழந்தையாக !!

மண்ணை அள்ளி தின்றிருந்தேன் , ஒரு போதும் பசிதத்தில்லை;


எப்போதும் அழுக்காய்தான் இருந்தேன், எவரும் பொறுப்படுத்தவில்லை;

பொழுதெல்லாம் தூங்கினேன்,எனக்காய் எல்லோரும் அமைதி காத்தார்கள்;

அடம்பிடித்தேன், கேட்டதெல்லாம் கிடைத்தது;

இன்னுமொரு ஜன்மம் வேண்டும் நான் குழந்தையாக மட்டுமே இருப்பதானால்!!