Thursday, June 5, 2014

வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே !!



" வலி  மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் 
தமிழுக்கு தெரிகின்றதே ,
வலி  மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள் 
தங்களுக்கு தெரிகின்றதா ?  " 

இராவணன் படத்தில் , ஸ்ரேயா வின் குரலில் , வைரமுத்துவின் அற்புத  வரிகள்.. 
இந்த வரிகளுக்கு என்ன தான் உண்மையான அர்த்தம் ? 
வலி  மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள் தமிழுக்கு எப்படி தெரியும் ?

இதோ அதன்  விளக்கம் ..

வலி மிகும் இடங்கள் 
***************************************************************************************************
   சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்'  ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்துமிகும் .

  • அ, இ ,எ என்னும் எழுத்துக்களின் பின் வலி மிகும்   +கட்சி = அக்கட்சி 
  • அந்த ,இந்த , எந்த எனும் சுட்டு வினாக்களின் பின் வலி மிகும்   அந்த +பையன் = அந்தப்பையன்  
  • அங்கு , இங்கு என்னும் சொற்களின் பின் வலி மிகும்  அங்கு +சென்றான் = அங்குச்சென்றான்  
  •  அப்படி ,இப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும்   இப்படி + செய்இப்படிச்செய்  
  • வன்தொடர் குற்றியலுகர சொற்களின் பின் வலி மிகும்     பட்டு+புடவை = பட்டுப்புடவை 
  • தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலி மிகும்   கனா + கண்டேன் = கனாக்கண்டேன்  
  •  முற்றியல்  'உ'கர சொற்களுக்கு பின் வலி மிகும்     முழு+படம் =  முழுப்படம் 
  • அரை , பாதி என்ற எண்ணும் சொற்களின் பின் வலி மிகும்   அரை +கால் =  அரைக்கால் 
  • ஈறு கேட்ட எதிர்மறை பெயர்எச்சத்தில் வலி மிகும்      ஓடா + குதிரை =   ஓடாக்குதிரை 
  • அகர , இகர ஈற்று வினைஎச்சங்களின் பின் வலி மிகும்  செய்ய +சொல்செய்யச்சொல்  
  • ஆய்,போய்,என என்னும் வினைஎச்சங்களின் பின் வலி மிகும்   போய்+பார்த்தான் = போய்ப்பார்த்தான் 
  •  இரண்டாம் வேற்றுமை உருபு(ஐ) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும்   கந்தனை + பழி = கந்தனைப்பழி 
  •  நான்காம் வேற்றுமை உருபு(கு) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும்    அவனுக்கு + சொல் = அவனுக்குச்சொல் 
  • ஆறாம்  வேற்றுமை தொகையில் நிலைமொழி அகிறனை இருப்பின் வலி மிகும்  நாய் + குட்டி = நாய்க்குட்டி  
  • உவமை தொகையில் வலி மிகும் மலர்தேன்மலர்த்தேன்  
  • பண்புத்தொகையில் வலி மிகும்  வெள்ளை + தாமரை =  வெள்ளைத்தாமரை  
  • ஓர்எழுத்து  ஒரு மொழிக்கு பின் வலி மிகும்  பூ + பந்தல் = பூப்பந்தல் 

 வலி  மிகா இடங்கள் 

***************************************************************************************************
 சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்'  ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகாது .

  • அது , இது ,அவை ,இவை  இவற்றின் பின் வலி மிகாது      அது+பண்பு =அதுபண்பு 
  • ஆ,ஓ,ஏ,யா என்ற வினா எழுத்துக்களின் பின் வலி மிகாது  எங்கே +போனாய் = எங்கேபோனாய் 
  • அன்று , இன்று , என்று ஆகிய சொற்களின் பின் அன்றுசொன்னான்  =அன்றுசொன்னான் 
  • படி ,மாறு என்று வரும் வினை எச்சங்களின் பின்   வலி மிகாது     படிக்கும்படி + சொன்னனர் = படிக்கும்படிசொன்னனர் 
  • '- ன்று , -ந்து ,-ண்டு, ய்து '  என்று முடியும் வினை எச்சங்களின் பின் வலி மிகாது     என்று + கத்தினார் =  என்றுகத்தினார் 
  • உயர்திணை பெயர் , பொது பெர்யர்களின் பின் வலி மிகாது  தம்பி +சிறியவன் = தம்பிசிறியவன் 
  • அங்கே , இங்கே, எங்கே என்று 'ஏ'காரத்தில் முடியும் சொற்களில் பின் வலி மிகாது  அங்கே + பார் = அங்கேபார் 
  • எது ,ஏது, யாது ,யாவை என்னும் வினாச் சொற்களின் பின்  வலி மிகாது  எதுகேட்டாய்எதுகேட்டாய் 
  • அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு என்னும் அளவு சொற்களின் பின்  வலி மிகாது  அவ்வளவு+பெரிய  = அவ்வளவுபெரிய 
  • பெயர்ச் எச்சத்தின் பின் வலி மிகாது    படித்த + பாடம் = படித்தபாடம் 
  • எழுவாய் தொடரில் வலி மிகாது ஆடுகத்தியதுஆடுகத்தியது 
  • விளிதொடரில் வலி மிகாது  தம்பி+போ !  = தம்பிபோ
  • மூன்றாம் வேற்றுமை உருபுகள் " ஓடு ,ஒடு'  சொற்களின் பின் வலி மிகாது  
தம்பியோடு + சேர்ந்தான் = தம்பியோடுசேர்ந்தான் 
  •  ஐந்தாம் வேற்றுமை உருபுகள் " இருந்து  ,நின்று '  சொற்களின் பின் வலி மிகாது 
 கூரையிலிருந்து + குதித்தான் = கூரையிலிருந்து குதித்தான் 
  • ஆறாம் வேற்றுமை உருபுகள் " அது   ,உடைய  '  சொற்களின் பின் வலி மிகாது   அவனது + பை = அவனது பை 
  • இரண்டாம் வேற்றுமை தொகையில் வலி மிகா    கனி + தின்றான் =  கனிதின்றான் 
  • ஆறாம் வேற்றுமை தொகையில்  நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலி மிகாது  குழந்தை + கை = குழந்தை கை 
  • உம்மை தொகையில்  வலி மிகாது      காய் கனி ;  வெற்றி தோல்வி  
  • வினை தொகையில்  வலி மிகாது   குடிநீர்  = குடி நீர் ;  ஆடு + கொடிஆடு கொடி 

    பாடலை கேட்டு ரசிப்பதோடு , கொஞ்சம் தமிழின் மாண்பினையும் உணர்வோம் ,   காதலின் அனுபவத்தை இலக்கணத்தோடு சொன்ன வைரமுத்துக்கு ஒரு பெரிய சபாஷ் !!