" வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே ,
வலி மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா ? "
இராவணன் படத்தில் , ஸ்ரேயா வின் குரலில் , வைரமுத்துவின் அற்புத வரிகள்..
இந்த வரிகளுக்கு என்ன தான் உண்மையான அர்த்தம் ?
வலி மிகும் இடங்கள் , வலி மிக இடங்கள் தமிழுக்கு எப்படி தெரியும் ?
இதோ அதன் விளக்கம் ..
வலி மிகும் இடங்கள்
***************************************************************************************************
சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்' ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்துமிகும் .
- அ, இ ,எ என்னும் எழுத்துக்களின் பின் வலி மிகும் அ+கட்சி = அக்கட்சி
- அந்த ,இந்த , எந்த எனும் சுட்டு வினாக்களின் பின் வலி மிகும் அந்த +பையன் = அந்தப்பையன்
- அங்கு , இங்கு என்னும் சொற்களின் பின் வலி மிகும் அங்கு +சென்றான் = அங்குச்சென்றான்
- அப்படி ,இப்படி என்னும் சொற்களின் பின் வலி மிகும் இப்படி + செய்= இப்படிச்செய்
- வன்தொடர் குற்றியலுகர சொற்களின் பின் வலி மிகும் பட்டு+புடவை = பட்டுப்புடவை
- தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகாரத்தின் பின் வலி மிகும் கனா + கண்டேன் = கனாக்கண்டேன்
- முற்றியல் 'உ'கர சொற்களுக்கு பின் வலி மிகும் முழு+படம் = முழுப்படம்
- அரை , பாதி என்ற எண்ணும் சொற்களின் பின் வலி மிகும் அரை +கால் = அரைக்கால்
- ஈறு கேட்ட எதிர்மறை பெயர்எச்சத்தில் வலி மிகும் ஓடா + குதிரை = ஓடாக்குதிரை
- அகர , இகர ஈற்று வினைஎச்சங்களின் பின் வலி மிகும் செய்ய +சொல்= செய்யச்சொல்
- ஆய்,போய்,என என்னும் வினைஎச்சங்களின் பின் வலி மிகும் போய்+பார்த்தான் = போய்ப்பார்த்தான்
- இரண்டாம் வேற்றுமை உருபு(ஐ) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும் கந்தனை + பழி = கந்தனைப்பழி
- நான்காம் வேற்றுமை உருபு(கு) க்கு பின் 'க் ,ச் ,த் ,ப்' வந்தால் வலி மிகும் அவனுக்கு + சொல் = அவனுக்குச்சொல்
- ஆறாம் வேற்றுமை தொகையில் நிலைமொழி அகிறனை இருப்பின் வலி மிகும் நாய் + குட்டி = நாய்க்குட்டி
- உவமை தொகையில் வலி மிகும் மலர்+ தேன்= மலர்த்தேன்
- பண்புத்தொகையில் வலி மிகும் வெள்ளை + தாமரை = வெள்ளைத்தாமரை
- ஓர்எழுத்து ஒரு மொழிக்கு பின் வலி மிகும் பூ + பந்தல் = பூப்பந்தல்
வலி மிகா இடங்கள் …
***************************************************************************************************
சொற்தொடர்களில் வருமொழி 'க்,ச்,த்,ப்' ஆகிய வல்லேழுதுக்களில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுத்து மிகாது .
- அது , இது ,அவை ,இவை இவற்றின் பின் வலி மிகாது அது+பண்பு =அதுபண்பு
- ஆ,ஓ,ஏ,யா என்ற வினா எழுத்துக்களின் பின் வலி மிகாது எங்கே +போனாய் = எங்கேபோனாய்
- அன்று , இன்று , என்று ஆகிய சொற்களின் பின் அன்று+ சொன்னான் =அன்றுசொன்னான்
- படி ,மாறு என்று வரும் வினை எச்சங்களின் பின் வலி மிகாது படிக்கும்படி + சொன்னனர் = படிக்கும்படிசொன்னனர்
- '- ன்று , -ந்து ,-ண்டு, ய்து ' என்று முடியும் வினை எச்சங்களின் பின் வலி மிகாது என்று + கத்தினார் = என்றுகத்தினார்
- உயர்திணை பெயர் , பொது பெர்யர்களின் பின் வலி மிகாது தம்பி +சிறியவன் = தம்பிசிறியவன்
- அங்கே , இங்கே, எங்கே என்று 'ஏ'காரத்தில் முடியும் சொற்களில் பின் வலி மிகாது அங்கே + பார் = அங்கேபார்
- எது ,ஏது, யாது ,யாவை என்னும் வினாச் சொற்களின் பின் வலி மிகாது எது+ கேட்டாய்= எதுகேட்டாய்
- அவ்வளவு , இவ்வளவு , எவ்வளவு என்னும் அளவு சொற்களின் பின் வலி மிகாது அவ்வளவு+பெரிய = அவ்வளவுபெரிய
- பெயர்ச் எச்சத்தின் பின் வலி மிகாது படித்த + பாடம் = படித்தபாடம்
- எழுவாய் தொடரில் வலி மிகாது ஆடு+ கத்தியது= ஆடுகத்தியது
- விளிதொடரில் வலி மிகாது தம்பி+போ ! = தம்பிபோ!
- மூன்றாம் வேற்றுமை உருபுகள் " ஓடு ,ஒடு' சொற்களின் பின் வலி மிகாது
தம்பியோடு + சேர்ந்தான் = தம்பியோடுசேர்ந்தான்
- ஐந்தாம் வேற்றுமை உருபுகள் " இருந்து ,நின்று ' சொற்களின் பின் வலி மிகாது
கூரையிலிருந்து + குதித்தான் = கூரையிலிருந்து குதித்தான்
- ஆறாம் வேற்றுமை உருபுகள் " அது ,உடைய ' சொற்களின் பின் வலி மிகாது அவனது + பை = அவனது பை
- இரண்டாம் வேற்றுமை தொகையில் வலி மிகா கனி + தின்றான் = கனிதின்றான்
- ஆறாம் வேற்றுமை தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலி மிகாது குழந்தை + கை = குழந்தை கை
- உம்மை தொகையில் வலி மிகாது காய் கனி ; வெற்றி தோல்வி
- வினை தொகையில் வலி மிகாது குடி+ நீர் = குடி நீர் ; ஆடு + கொடி= ஆடு கொடி
பாடலை கேட்டு ரசிப்பதோடு , கொஞ்சம் தமிழின் மாண்பினையும் உணர்வோம் , காதலின் அனுபவத்தை இலக்கணத்தோடு சொன்ன வைரமுத்துக்கு ஒரு பெரிய சபாஷ் !!